கதிர்கா கவிதைகள் [3]

அலட்சியம்
சட்டையோரக் கறையை தண்ணீர் விட்டுத் துடைத்தேன்!
துடைத்த பின்னர் தரையில் விழுந்து
வெள்ளைத் துண்டு அழுக்கானது,
கவலையின்றி மிதித்துச்சென்றேன்!
ஹோட்டல் அறை!!!

சுதந்திரம்
'டேய் திரும்பாதே'
'டேய் பேசாதே'
'டேய் நேரா நில்லு'
ஆசிரியர் எல்லா மாணவரையும்
கட்டுக்கோப்பாய் நிற்க வைத்திருந்தார்!
சுதந்திர தின கொடியேற்ற விழாவாம்!!

நல்ல நேரம்
ஐந்து முதல் ஆறரை வரை நல்ல நேரமாம்,
சிலிர்ப்பிய ஆட்டை ஐந்தரைக்கு வெட்டினர்!
சத்தம் வருவதற்குள் சகலமும் அடங்கியது!
நல்ல நேரம் மனிதருக்கு மட்டும் தானோ?
ஆடுகளுக்கு இல்லையோ?


No comments: