பிட் நோட்டீஸ் - 9/24

அயோத்தி வழக்குக்கும் இதற்கும் சம்பந்தமில்லை
வானத்தில் கிழக்கு மேற்கு எனப் பாகுபாடு கிடையாது. எல்லா திசையும் ஒன்றுதான். அதைப் பார்க்கும் மனிதரின் மனம்தான் அதை வேறுபடுத்தி பார்க்கிறது - சொன்னது புத்தர்

சமீபத்தில் படித்த ஜென் கதை
இரு துறவிகள் சாலையில் சென்று கொன்றிருந்தனர். சாலையின் நடுவே மழைநீர் தேங்கி முழங்கால் அளவு இருந்தது. வெள்ளையுடை அணிந்து தேவதை போன்ற இளம்பெண் ஒருத்தி அந்த குறுகிய சாலையில் நடந்தால் உடை அழுக்காகி விடுமென்று ரொம்ப நேரமாக நின்று கொண்டே இருந்தாள். இந்த இரு துறவிகளைக் கண்டவுடன் தனக்கு உதவுமாறு கேட்டாள். இளைய துறவி சற்று தயங்கினார். மூத்த துறவி தாமதிக்காமல் அவளை கைகளில் தூக்கி சாலையை கடக்க உதவினார்.
அவர்கள் இருப்பிடத்திற்கு வந்த பிறகு, பல மணிநேரம் கழித்து, இளைய துறவி மூத்த துறவியிடம் கேட்டார், 'அய்யா! துறவியாகிய நாம், பெண்களை தொடக்கூடாது அல்லவா? நீங்கள் அந்த பெண்ணை தூக்கியது சரியில்லை அல்லவா?'. மூத்த துறவி சொன்னார், 'நான் தூக்கிய பெண்ணை சில நிமிடங்களில் இறக்கி வைத்துவிட்டேன் சகோதரரே! நீங்கள் தான் அந்த பெண்ணை இன்னும் தூக்கி வைத்துக்கொண்டு இருக்கிறீர்கள்'

நான் ரசித்த ஹைக்கூ
கடற்கரையில் நினைவுக்காக
அவள் விட்டுச் சென்றச் சுவடுகள் -
வருகிறது அலை!

திருவிழாவில் மகிழ்கிறது,
பலிகடா ஆடு -
வாக்காளன்!
[சந்தர் சுப்ரமணியன்]

படித்த ஜோக்
அவனை மூளை மாற்ற அறுவைச்சகிச்சைக்கு சென்றான். சாதா மூளை ஒரு லட்சம், ஸ்பெசல் மூளை பத்து லட்சம் என்று அறிவிப்பு பலகை இருந்தது. டாக்டரிடம் ஸ்பெசல் மூளை என்றால் என்ன என்று கேட்டான். டாக்டர் சொன்னார், 'சாதா மூளை சாதாரண குடிமகனுடையது. ரொம்ப யூஸ் செய்யப்பட்டது. ஸ்பெசல் மூளை அரசியல்வாதியுடையது. ஒருமுறை கூட யூஸ் செய்யப்படாதவை'


No comments: