கதிர்கா கவிதைகள் [4]

விவசாயி
விதைத்து நெல்,
பல மாத உழைப்பில்,
விளைந்தது கடன்.

பத்தரப்பதிவு
ப்யூன் ஐந்தாயிரம் லஞ்சம்
கேட்டவுடன் ஏமாற்றுக்காரனென
எரிச்சல் வருகிறது,
ஐம்பது லட்ச வீட்டை
இருபது லட்சத்துக்கு
பதிய சென்றவனுக்கு!!!

வேலைவாய்ப்பு அலுவலகம்
கொடுக்க வேலையில்லை,
அங்கே வேலை(!) செய்யும்
பத்து பேருக்காக
தினமும் திறந்து வைத்திருக்கிறார்கள்!!

அம்மா மகள் சண்டை
அவர் வந்தவுடன் அவளை அதட்ட சொல்ல வேண்டும்
அம்மா மனதுக்குள் நினைத்தாள்!
அப்பா வந்தவுடன் உன்னை திட்ட சொல்லுறேன்
அம்மாவிடம் மகள் சொன்னாள்!!


No comments: