பிட் நோட்டீஸ் - 9/27

சமீபத்தில் ரசித்த ஒரு நகைச்சுவை உரையாடல்
அவன்: யானையை விட பெருசா இருக்கும். இருந்தாலும் எடையே இருக்காது. ஆனா லட்சம் பேர் சேர்ந்தாலும் அத தூக்க முடியாது. அது என்ன?
இவன்: தெரியலடா....
[உங்களுக்கும் தெரியலையா? விடை இந்த பதிவின் கடைசியில்]

Business Tips - சின்னஞ்சிறுகதை
அவருக்கு அன்று 30-வது திருமண நாள்.
தினமும் சாமி கும்பிடும் அவரிடம் அன்று கனவில் கடவுள் தோன்றி
"பக்தா! உனக்கு என்ன வரம் வேண்டும். ஒரே வரம்தான், ஒருவர் சம்பந்தப்பட்டதாகத்தான் இருக்க வேண்டும். என்ன வேண்டும் கேள்" என்றார்.
மிகுந்த சந்தோஷத்தில் திக்குமுக்காடிப்போன அவர்,
"என் மனைவிக்கு 50 வயசாயிடுச்சு. எனக்கு இளமையான மனைவிதான் பிடிக்கும். அதனால என் மனைவி என்னைவிட 25 வருஷம் இளமையா இருக்கணும். அதுக்கு வரம் கொடுங்க" என்றார்.
கடவுள் சிரித்துக்கொண்டே நாளை காலை எழுந்திருக்கும்போது வரம் நிறைவேரும் என்று கூறிவிட்டு மறைந்தார்.
மறுநாள் விடிந்தது. அவர் எழுந்து மனைவியைப் பார்த்தார். அவர் மனைவி இளமையாக எல்லாம் மாறவில்லை. வெறும் கனவுதானா அது என்று கஷ்டப்பட்டு எழுந்து கண்ணாடியைப் பார்த்தார். 55 வயதான அவர் 75 வயதாய் மாறிவிட்டிருந்தார்.

நீதி:
நம்ம பிஸினசுல இன்னொருத்தரோட உதவி கேட்டோம்னா, என்ன உதவி, அது எப்படி வேணும்னு க்ளியரா சொல்லணும். இல்லைன்ன அந்த உதவியே உபத்திரவமாகிவிடும்.
[எங்கோ கேட்டது]

ரசித்த ஹைக்கூ
சகுனம்
பூனை செத்துவிட்டது!
எந்த மனிதன்...
குறுக்கெ சென்றானோ?

ஏழை
மகள் பூப்பெய்திவிட்டாள்
தாய்க்கும் இனி...
தாவணிதான்
[ரசிகவ் ஞானியார்]

பி.கு: இரண்டாவது கவிதை முதலில் புரியவில்லை. பின்னர் மற்றொரு நண்பரின் கருத்து மூலம் புரிந்தது. அதாவது, புதுத்துணிக்கு வழியில்லாத்தால், தாய் தன் சேலையின் பாதியை மகளுக்கு தருகிறாராம்.


ஆரம்பத்தில் கொடுக்கப்பட்டுள்ள உரையாடலுக்கான விடை,
அவன்: யானையின் நிழல்


2 comments:

எம் அப்துல் காதர் said...

அந்த ரெண்டாவது கவிதையும் அதன் விளக்கமும் அடடா..!! எல்லாமே நல்லா இருக்கு. தொடர்ந்து எழுதுங்க. வாழ்த்துகள்.

ரமேஷ் வைத்யா said...

ஐயே...