சின்னஞ்சிறுகதை - இரண்டே வார்த்தைகளில்

பக்கம் பக்கமாய் பேசும் கதைகள் உண்டு. ஒரே பக்கத்தில் எழுதப்படும் கதைகளும் உணடு. ஆனால் ஒரு சில வார்த்தைகளிலும் கதை சொல்லலாம். [எழுத்தாளர் சுஜாதா சில ஆண்டுகளுக்கு முன் இதைப்பற்றி எழுதியதாய் ஞாபகம்]

என்னை வசித்த ஒரு கதை Ernest Hemingway எழுதியது.
"விற்பனைக்கு: குழந்தையின் செருப்புகள், உபயோகப்படுத்தப் படாதவை."
[For sale: baby shoes, never worn] ஒரே வரியில் மனதை உருகச்செய்யும். இது உலகப்புகழ் பெற்ற வரிகளாய் இருப்பதில் ஆச்சிரியம் இல்லை.

உலகளவில் பிரபலமான மற்றொரு கதை,
"அவன் கண் விழித்த போது டைனோசர் இன்னும் அங்கிருந்தது"
"When he woke up, the dinosaur was still there" எழுதியது Augusto Monterroso.

நான் ரசித்த அறிவியல் புனைவு [Science Fiction-ஐ இப்படித்தானே கூறுவார்கள்] கதை இதோ: "அன்றைய தினம் சூரியன் மேற்கே உதித்தது"
"That morning the sun rose in the west" இதை எழுதியது Anthony Burgess.

திகில் கதையை பொறுத்த வரையில் எனக்குப் பிடித்தது இது,
"உலகின் கடைசி மனிதன் அறையில் அமர்ந்திருந்தான். அறைக்கதவு தட்டப்பட்டது".
"The last man on Earth sat alone in a room. There was a knock on the door..." இதை எழுதியது Fredric Brown.

ஒரு மசாலா கதை, "கடவுளே! நான் கர்ப்பம்!! யார் காரணம்"
"Good God, I'm pregnant, I wonder who did it" எழுதியது யாரென்று தெரியவில்லை.

இதையெல்லாம் சொல்லி நம் பங்கு என்று எதுவும் வேண்டாமா?
"ஒழிந்தான் கடவுள்"


5 comments:

Unknown said...

"உலகின் கடைசி மனிதன் அறையில் அமர்ந்திருந்தான். அறைக்கதவு தட்டப்பட்டது".
"The last man on Earth sat alone in a room. There was a knock on the door...


Good story Kangal udayaan!! it was informative and very short !

Unknown said...

Please remove word verification box in comment box. . .!! It will allow others to comment easaily ..!! continue wryting ! all tha best ..!!

Anonymous said...

Good and informative post..

தொடர்ந்து எழுதுங்கள்.

கதிர்கா said...

பிரபாகரன் பழனிசாமி - Verification box-ஐ எடுத்துவிட்டேன். நன்றி.

ராதை/Radhai - தங்கள் கருத்துக்கு நன்றி.

Jackiesekar said...

இந்த ஒருவரி கதைகளை ரசித்து ருசித்தேன்