கதிர்கா கவிதைகள் [1]

மனைவியின் மரணம்
நான் வாழும் வீட்டில் என்னை சேர்த்து ஆறு பேர்.
மகன், மருமகள், பேரன், பேத்திகள்.
நான் மட்டும் தனியே!!!

கற்பனை
குருவிகளின் சத்தம்,
வண்டுகளின் ரீங்காரம்,
அனைத்தும் சுவைக்கிறேன்
கவிதைகளில் மட்டும்.

முரண்
'சோ' என பெய்யும் மழை...
மகிழ்ச்சியில் மலைவாழ் மரங்கள்,
நான் மட்டும் பழித்தேன்....
என் மலைச்சுற்றுலா தடைப்பட்டதென்று!!!

கணக்கு
ஒன்றும் ஒன்றும் இணைந்து மூன்றானால் கல்யாணக் கணக்கு!
ஒன்றும் ஒன்றும் இணைந்து ஒன்றானால் காதல் கணக்கு!
ஒன்றும் ஒன்றும் இணைந்து இல்லாமல் போனோமே சாதிக் கணக்கால்!!!


1 comment:

Anonymous said...

எல்லாமே அழகு!