இப்படிக்கு புரியாதசாமி

நிஜமாவே எனக்கு புரியல பாஸ்!!!

 சமீபத்தில் ஒரு செய்தி படித்தேன். மிகவும் கவலை தந்த செய்தி.
மேற்கு வங்க மாநிலத்தில் தண்டவாளத்தைக் கடக்க முயன்ற யானைகள் கூட்டத்தின் மீது, சரக்கு ரயில் மோதியதில் ஏழு யானைகள் பலியாயின. விரிவான செய்திக்கு இங்கே செல்லவும். ஒன்றும் அறியாத யானைகள் மனிதனின் தவறுகளினால் பலியானது மிகவும் துயரமான விஷயமே.

இவ்வாறு யானைகள் பலியானதாய் செய்திகள் வந்த சில மணி நேரத்திலேயே மற்றொரு செய்தியும் வெளியானது. அதாவது, சுற்றுப்புறச்சூழல் அமைச்சர், யானைகள் பலியானதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அமைச்சருக்கு யானைகள் மேல் உள்ள அக்கறை பாராட்டுக்குரியது. அதற்கு ரயில்வேத்துறை அமைச்சரும் இரண்டு நாட்களில் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அடுத்த செய்தியும் வந்துள்ளது.

இதுல எனக்கு என்ன புரியலன்னு கேக்குறீங்களா? கடந்த ஆறு மாசத்துல மட்டும் இதுவரைக்கும் நடந்த ரயில்வே விபத்துகளில் கிட்டத்தட்ட 200 பேர் (பாவப்பட்ட மனுஷப் பிறவிங்கதான்) இறந்திருக்காங்க. அவையெல்லாம் ஒருநாள் ரெண்டுநாள் செய்திகளா வந்ததே தவிர எந்த ஆளுங்கட்சி அமைச்சரிடமிருந்தும் கண்டனச் செய்தியோ, ரயில்வே அமைச்சரிடமிருந்து நடவடிக்கை எடுத்த செய்தியோ வந்ததாக ஞாபகம் இல்லை.

ஒருவேளை, நம்ம கூட நாய் நரின்னு எதையாவது கூட்டிட்டுப்போய் அதுவும் நம்ம கூட இறந்தாதான் இந்த மாதிரி உடனடி நடவடிக்கை எடுப்பாங்களோ? இல்லைன்னா, யானைகளுக்கு கவலைப்பட சுற்றுப்புறச்சூழல் அமைச்சர் இருக்குற மாதிரி மனிதர்களுக்கு கவலைப்பட மனிதர்குல அமைச்சர் என்று ஒருத்தர அப்பாயின்ட் பண்ணனும்மோ?

நிஜமாவே எனக்கு புரியல பாஸ்!!!

- புரியாதசாமி