Palindrome என்ற வார்த்தை பலருக்கும் பரிட்சியமாக இருக்கும். அதாவது, ஒரு வார்த்தையையோ வரியையோ இடமிருந்து வலமாக படித்தாலும் வலமிருந்து இடமாக படித்தாலும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும். உதாரணமாக 'விகடகவி' என்ற வார்த்தை சிறந்த எடுத்துக்காட்டாகும்.
ஆங்கிலத்தில் 26 எழுத்துக்களை வைத்து இவற்றை எழுதுவதைக் காட்டிலும் தமிழில் எழுதுவது சற்று கடினம்தான். தமிழ் இலக்கியத்தில் அத்தகைய வரிகள் ஆங்காங்கே காணப்படிகின்றன. ஒரு முழுப்பாடலையே அப்படி எழுதுவது அதனினும் கடினம்தான்.
அப்படிப்பட்ட முழுப்பாடல், திருஞானசம்பந்தரின் திருமாலைமாற்றுத் திருப்பதிகத்தில் உண்டு. அதைப்பற்றி அறிந்து கொள்ள இங்கே செல்லவும். திருக்குறளை கோனார் நோட்ஸில் மட்டுமே படித்த பரம்பரை என்பதால் எனக்கு அந்த வரிகள் சுத்தமாக புரியவில்லை. அந்த வரிகளுக்கான அர்த்ததிற்கு இங்கே செல்லவும்.
ஔவையின் இந்த வரிகள் படிக்க சற்று சுலபமானது (இதையும் உடனே புரிந்து கொள்ள முடியவில்லை!!).
'நீவாத மாதவா தாமோக ராகமோ தாவாத மாதவா நீ'.
'நீங்காத பெரிய தவத்தையுடைவனே! மிகுந்த மயக்க வேட்கை கெடாது, அழகிய பெண்ணுடைய ஆசையை நீக்குவாயாக'
இதைவிட சற்று சுலபமாக ஏதாவது உண்டா என்று இணையத்தை துழாவிய போது அண்ணாகண்ணனின் இந்த வரிகளைக் கண்டேன்.
வாய்போல் சரிவில் தினமழை கோணிபிடி
கோவில் தோத்தோத் தோத்திரமயம் - ஆம்ஆம்
யமரதித் தோத்தோத் தோல்வி கோடிபிணி கோழை
மனதில் விரிசல் போய்வா
அர்த்தமறிய, இங்கே செல்லவும்.கோவில் தோத்தோத் தோத்திரமயம் - ஆம்ஆம்
யமரதித் தோத்தோத் தோல்வி கோடிபிணி கோழை
மனதில் விரிசல் போய்வா
எல்லாம் சரி, சொந்த பிட்டாய் என்ன செய்யலாம்னு யோசிட்ட இருந்தப்ப, எவ்வளோ பண்ணிட்டோம் இத பண்ண மாட்டோமான்னு களத்துல இறங்க முடிவு பண்ணிட்டேன். முடிந்தவரை நடைமுறைத் தமிழ்ல எழுதலாம்னு ரெண்டு மணி நேரம் கழிச்சு பிடிச்சுட்டேன். இதோ நம்ம படைப்பு.
பக்தி
பூ தந்தம் பசு வருக - தேயாதே
கருவ சுபம் தந்த பூ
(கருவம் - கரு, உள்மையம், முதன்மை)
அதாவது, பூ, தந்தம், பசு என்று சிறியது முதல் பெரியது வரை எந்த செல்வம் வந்தாலும் உள் மனதில் உண்மையான சந்தோஷம் தந்த பூ போன்ற பக்தி மனதில் என்றும் குறையாது!!! (நல்லா இல்லைன்னா விட்டுறுங்கோ)
டிஸ்கி: மேலே உள்ள பதிவ படிச்சுட்டு என்னை பெரிய இலக்கியவாதின்னு நீங்க நினைச்சு செப்டம்பர் Fool ஆயிட்டங்கன்னா அதற்கு நான் பொறுப்பல்ல.
5 comments:
Very good. Liked it :)
நன்றி பாலாஜி
அருமையான தகவல் பகிர்ந்தமைக்கு நன்றி .. :)
arumaiyaana thakaval, vaalththukkal,
nice!
Post a Comment